Monday 28 September 2015

SPECIAL GENERAL BODY MEETING OF AIBSNLPWA MADURAI ON 27-09-2015



























           27-09-2015 அன்று நமது சங்கத்தின் 250க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து  கொண்ட    சிறப்பு     பொதுக்குழு கூட்டம் நமது மாவட்டத் தலைவர்    திரு. ரவீந்திரன்  தலைமையில் காலை 1015 மணியளவில் மதுரையில் BSNL மதுரை மாவட்ட பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் சிறப்பாக   நடைபெற்றது.  
            திருமதி கல்யாணி சுந்தரேசன் அவர்களின் இறைவணக்கத்திற்குப்பின் மறைந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
         
    நமதுசெயலரின் வரவேற்புரை மற்றும் சென்ற பொதுக்குழு கூட்ட அறிக்கைக்குப்பின்  
          75 வயதினைக்கடந்த, நமது செயலர்  திரு GRD  உள்ளிட்ட,12 தோழர்கள் நமது அகில இந்தியச்சங்கத் துணைத்தலைவர் திரு DG அவர்களால் பொன்னாடை அணிவிக்கப்பட்டும்   தமிழ் மாநிலச்செயலர்  திரு ராமாராவ் அவர்களால்   நினைவுப்பரிசுவழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டனர்.   

            சிறப்பு அழைப்பாளர்களாக BSNLEU மதுரை மாவட்டச்செயலர்                       திரு சூரியன்,AIBSNLPWA  நெல்லை மாவட்டச்செயலர் திரு அருணாசலம், AIBSNLPWA தமிழ்மாநிலச்செயலர் திரு ராமாராவ், AIBSNLPWA மத்திய சங்கத்துணைத்தலைவரும்  உலக ஓய்வூதியர் சம்மேளன தெற்காசிய பகுதிச்செயலாளருமான திரு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

       திரு ராமாராவ் அவர்கள்,நவம்பர் மாதத்தில் பெங்களூருவில் நடைபெற இருக்கும் நமது அகில இந்திய மாநாடுகுறித்தும், அமைப்பு நிலை குறித்தும் நமது மாவட்டச்சங்கத்தின் செயல்பாடுகளைப்பாராட்டியும் உரை நிகழ்த்தினார்.
    திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் உலக முதியோர் மற்றும் ஓய்வூதியர்கள் குறித்த புள்ளிவிவரங்களுடனும்,ஆய்வறிக்கைகளுடனும் சிறப்புரையாற்றினார்.
           மேலும் அவர் தனது உரையில் நமது தற்போதைய தலையாய பிரச்சனை களான 
  • 78.2% அகவிலைப்படி இணைப்பு 
  • பென்ஷன் முரண்பாடு (ANOMALY)
  • 7 வது ஊதியக்குழுவுக்கு நமது குறிப்பு(MEMORANDUM)
  • மத்தியசங்கச்செயல் பாடுகள் குறித்து விளக்கமாக உரையாற்றினார்.
      நமது மாவட்டப் பொருளாளர் திரு ஜனார்த்தனம் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் சுமார் 1315 மணியளவில் நிறைவு பெற்றது. 
  

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.