Monday 30 December 2019

Today TEN BSNL Employees are retiring on Superannuation. The names and photos of the are shown here with pride.
ஒய்வு பெறும் தோழர்கள் நோய்,நொடியின்றி, சுகமான , வளமான வாழ்வு பெற்று நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறோம்.
உங்கள் எதிர்கால நலத்திற்கு, வளத்திற்கு , பாதுகாப்பிற்கு AIBSNLPWA  ஓய்வூதியர் நல சங்கத்தில் உங்களை இணைத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இது சாதி , சமயம் , மதம் , இனம் , மாநிலம் , பதவி பாகுபாடு ,கட்சி சார்பு என எதுவும் பாராமல் சுயமாக 10 ஆண்டுகளாக ஓய்வூதியர்கள் நன்மைக்காக அகில இந்திய அளவில் வியாபித்து பாடுபட்டு வரும் சங்கம். பல சாதனைகளை படைத்து ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஓய்வூதியர்களுக்கும் வழங்கவேண்டும் என்று மற்ற ஓய்வூதியர் சங்கங்களுடன் இணைந்து போராடி வருகிறது. உங்கள் வரவு மேலும் இந்த கோரிக்கைக்கு வலு சேர்க்கும்.
ஆயுள் உறுப்பினராக இணைந்திடுவீர், . வளமான எதிர்காலத்தை படைத்திடுவோம்.
இவண் 
தோழமையுள்ள 
S .வீராச்சாமி ,
மாவட்ட செயலர் 
AIBSNLPWA,
மதுரை மாவட்டம்.





Monday 23 December 2019

மதுரை மா நகரில் 22-12-2019 , மாவட்ட AIBSNLPWA சங்கம் ஓய்வூதியர் தின விழாவை ஒரு பிரமாண்டமான திருவிழாவாக நடத்தியது. ஓய்வு பெற்ற நம் ஓய்வூதியர்கள் , அகவை 70 ஐ கடந்தவர்கள் சுமார் 320 பாராட்டி கௌரவிக்கப்படுவார்கள் என வலைத் தளத்திலும், வாட்ஸ் அப் மூலமாகவும், போன் அழைப்பு மூலமாகவும், நேரிலே கண்டபோதும் நினைவுறுத்தினார்கள் .சுமார் 10-30 மணிக்கு விழா துவங்கியது. 
இறை வணக்கப்பாடலை திருமதி கல்யாணி சுந்தரேசன் அவர்கள் திருக்குறள் பொது மறை பண் பாமாலையாக பாடியது மிகவும் போற்றுதற்குரியது.  
சமீப காலங்களில் மறைந்த நெல்லை அருணா மற்றும் மாவட்ட சங்க தோழர்களின் மறைவிற்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைவர் தோழர் தர்மராஜன் அஜெண்டாவை அறிவித்து அவையோரின் ஒப்புதல் பெற்றார் .பிறகு தமது தலைமையுரையில் ஓய்வூதியர் தினத்தின் அருமை, பெருமைகளையும் , அதை ஏன் கொண்டாடுகிறோம் என்றும் எடுத்துக் கூறினார்.
மாவட்ட செயலர் தோழர் வீராச்சாமி  வந்திருந்த  அனைவரையும் வரவேற்று பேசினார். சரித்திர வரலாறு மிக்க நாள் மேலும் 320 ஓய்வூதியர்களை ஒன்றாக வவைத்து ஒரே விழா மேடையில் தலைவர்களை கொண்டு பாராட்ட செய்து , பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்துவது இதுவே முதன் முறையாகும். இது போல் இனி வருமா என்பதுவும் யாரும் உறுதியாக கூற முடியாத நிகழ்வு இது என்று பெருமை யுடன் பேசினார்.
முதன்மை பொது மேலாளர் நம் சங்கத்தை பாராட்டி " நான் ஜீன் 2020ல் ஒய்வு பெற்றபின் ஜூலை மாதம் முதல் உங்கள் சங்கத்தில் இணைந்து பணியாற்றுவேன் " என்றார் . துணை பொது மேலாளர் திரு சந்திரசேகரன் அவர்கள் பேசும்போது " விரைவில் உங்களுடன் இணைவேன் என்னால் இயன்ற உதவிகளை சங்கத்திற்கு செய்வேன்." என்று கூறினார் . மற்றோரு துணை பொது மேலாளர் திரு விஜயகுமார் அவர்களும் மற்றும் விருதுநகர் மாவட்ட தலைவர் தோழர் சண்முகம் அவர்களும் விழாவிற்கு வந்திருந்தார்கள் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள் .
மாநில உதவி செயலர் தோழர் சூரியன் தமதுரையில் நமது சங்கம் எந்தவித சாதி, மதம், இனம், கட்சி , பதவி இவைகளை சாராமல் தனித்துவமாக இயங்கி வருகிறது. ஓய்வூதியர் நலத்தில் மட்டுமல்லாமல் சமூக அக்கறையுடன் உழைத்து வருகிறது. இதற்கு சான்றாக கஜா புயலினால் முற்றும் சேதமுற்ற கொறுக்கை எனும் சிற்றுரில் முழுவதுமாக இடிந்து விழுந்த நடு நிலைப் பள்ளியை சீரமைத்து கொடுத்துள்ளோம். மேலும் நாட்டில் பல இடங்களில் வெள்ளத்தால் சேதமுற்ற மாநிலங்களின் சீரமைப்புக்கு வெள்ள நிதியாக ரூ 40 லட்சம் பிரதமர் தேசிய நிவாரண நிதியாக அளித்துள்ளோம்.. எனவே சொந்த விருப்பில் ஓய்வு பெறும் ஓய்வூதியர்களை நம் சங்கத்தில் இணைய அவர்களை அணுக வேண்டும் என்றார்
மாநில செயலர் தோழர் R .வெங்கடாசலம் சுமார் ஒரு மணி 10 நிமிடங்கள் உரையாற்றினார்கள். 7வது ஊதியக் குழு பரிந்துரைகளை நமக்கு நம் சங்கம் நிச்சயம் பெற்றுத்தரும். நம் சாதனைகளை தம் சாதனைகளாக சில சங்கங்கள் நோட்டிஸ் அடித்து பொய் சொல்லி வருகின்றன. அவைகளை நம்ப வேண்டாம். மிகவும் கஷ்டமான பிரச்சினை களை நம் விடா முயற்சியின் மூலம் தீர்த்து வைத்துள்ளோம் இதற்கு சான்றாக குடந்தையில் ஓவியா எனும் 13 வயது சிறுமிக்கு மறைந்த அவரது தந்தையின் குடும்ப ஒய்வு வூதியம் பெற்று தந்ததையும் , தஞ்சை யின் மற்றொரு கேசையும் எடுத்துக்கூறி பல லட்சங்கள் நிலுவைத் தொகையினை பெற்றுத்தந்ததையும் சங்கத்தின் சாதனையினை பலத்த கைத்தட்டல் களுக்கிடையே கூறினார்
MRS திட்டத்திலிருந்து CGHS  திட்டத்திற்கு மாற அறிவுறுத்தினார். CGHS விபரங்கள் குறித்த கையேடு தோழர் நெல்லை அருணா அவர்கள் மூலம் வெளியிட்டுள்ளோம் . அது எல்லோருக்கும் வழங்கப்படும். BSNL ஓய்வூதியர்கள் CGHS Non Covered பகுதியில் இருந்தாலும் அதில் இணைந்து பயன் பெறலாம். அதற்கு செலுத்தப்படும் சந்தா தொகையை BSNL  நிர்வாகம் நமக்கு திரும்ப தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது மிகப்பெரிய நன்மை பயப்பதாகும் , விரைவில் மதுரையிலும், கோவையிலும் CGHS  வெல்னஸ் சென்டர்கள் துவங்கப்பட உள்ளன என்று கூறி உணவு வேளை நேரம் நெருங்கி விட்டதால் தமது உரையை முடித்துக்கொண்டார்.
தோழர் நடராசன் துணை பொது மேலாளர் ஒய்வு  நன்றியுரை கூற விழா பேச்சரங்கம் இனிது முடிவுற்றது.
பிறகு அகவை 70 ஐ கடந்த தோழர்கள் சுமார் 200 பேர்களுக்கு மேல் ஒவ்வொருவரும் விழா மேடைக்கு அழைக்கப்பட்டு முதன்மை பொது மேலாளர், மாநில செயலர் ,மாநில உதவி செயலர் மற்றும் மாவட்ட செயலர் அவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு , அஜந்தா சுவர் கடிகாரம் நினைவு பரிசும் வழங்கி நிழற் படம் எடுக்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டார்கள் . உணவருந்தும் பகுதியில் தோழர் வீராச்சாமி அனைவரையும் நன்கு கவனித்து உணவு வகைகளை சரியாக பரிமாற செய்து கருத்தாக கவனித்துக்கொண்டார். மேலும் CGHS  கையேடுகளை அனைவருக்கும் வழங்கினார்.
இன்றைய விழாவிற்கு 600 பேர்களுக்கு மேல் வந்து சிறப்பித்தனர் அரங்கத்தில் இட நெருக்கடி காரணமாக நூற்றுக்கணக்கான தோழர்கள் வெளிப்புற இடங்களில் சவுகரியமாக அமர்ந்தபடி நிகழ்வுகளை கண்காணித்தது பாராட்டுதற்குரியது .உணவு சுவையாக சூடாக மதுரை பாரம்பரியத்தை பறை சாற்றும் விதமாக இருந்தது. அன்புடன் சமையற்கலை ஊழியர்கள் உணவு பரிமாறியது அதன் சுவையை மேலும் கூட்டியது.
மதுரை மாநகரில் கடல் அலைகள்  ஆர்ப்பரிக்க சாத்தியமில்லை 
மதுரை சங்க அரங்கில் மனித தலைகள் இருப்பதில் ஆச்சரியமில்லை.
  

268 நிழற்படங்கள் இங்கே "4 லிங்க்" கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு லிங்க் ஆக கிளிக் செய்து அனைத்து நிழற்படங்ககளை பார்க்கலாம்.                                                                                          

             LINK 1                      LINK 2           LINK 3                   LINK 4   






















Friday 20 December 2019

அன்புத்தோழர்களே !
அனைவருக்கும் ஓய்வூதியர் தின நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளை 22-12-2019 ஞாயிறு  காலை 10.00 மணி அளவில் மதுரை -2 முதன்மை பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் மாபெரும் பிரமாண்ட ஓய்வூதியர்கள் தின விழா கொண்டாடப்பட உள்ளது.
அதுபோழ்து அகவை 70-ஐ க்கடந்த சுமார் 320 ஓய்வூதியர்கள் பொன்னாடை போர்த்தி , நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட உள்ளார்கள் . ஒரே விழா மேடையில் 320 பேர்கள் பாராட்டப்பட உள்ளது இந்தியாவிலேயே இதுவே முதன் முறையாக இருக்கும். இந்த சரித்திர புகழ் பெறும் விழாவில் பெருந்திரளாக நம் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். விழாவில் 
மதுரை மாவட்ட முதன்மை பொது மேலாளர் திருமதி. S. E. ராஜம் ITS  அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்கள் , மற்றும் BSNL  மதுரை மாவட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
  தமிழ் மாநில செயலாளர்                                                    தோழர். R.வெங்கடாச்சலம். 
அவர்கள் பேருரை ஆற்ற உள்ளார்கள் .மேலும் தமிழ் மாநில நிர்வாகிகளும் உரை ஆற்ற உள்ளார்கள்.
அனைவரையும் வருக! வருக!! என அன்புடன் அழைக்கிறோம்!!!
தோழமை வாழ்த்துக்களுடன் ,
S. வீராச்சாமி ,
AIBSNLPWA
மாவட்ட செயலர் 
மற்றும் 
மதுரை மாவட்ட சங்க நிர்வாகிகள் .







.

Thursday 12 December 2019

Minister Ravi Shankar Prasad seems to be influenced/misinformed by the DoT officers who are totally negative to pensioners. Minister is too much worried about BSNL. He asks us to wait till BSNL earns some profit!! We told him that there is no link between our pension and BSNL profit. But he is not prepared to listen further. He is a minister. He is a lawyer. He does not reject our demand. Nor he concedes it also.
In our last CWC meeting at Kanyakumari in February 2019 we discussed the matter and decided to resort to legal remedy if all other attempts to get a decision from government fail. It is the last resort. We are aware of the pitfalls of court case. Case is not for asking revision order. Case can be against injustice. DOP&PW has already issued orders for pension revision of all those who are covered by CCS Pension Rule 1972. We are denied the benefits of that order even though we are also covered by the said rule. It is discrimination, naked injustice. There is cause of action for the Court to intervene.
Court Case means delay. We have to explore all other possibilities again and again. We should take legal opinion from two or more lawyers. We shall meet advocates at different stations and then finally take a decision at Gorakhpur CWC in March 2020. We shall continue our efforts. We will fight for justice. When Govt does not do justice, judiciary is the only shelter for common man.
Courtesy: CHQ Web

Sunday 8 December 2019

Important News.
As per our request , Hon. Minister for Parliament Affairs, is arranging a meeting of our Leaders with Hon. Minister for Communication on Monday or Tuesday at New Delhi .
Com. D.Gopalakrishnan., Com. T.S. Vittoban,and Com. Chengappa have reached New Delhi. Leaders from Delhi Circle will accompany.
Our leaders will stay in Delhi till the weekend. A detailed information about their talks will be intimated soon.
R.Venkatachalam.
TN Circle secretary

Tuesday 3 December 2019

TOTALLY 93000 HAVE 
OPTED FOR 
VRS
Info from CHQ President.
மாபெரும் தலைவர் மறைந்தார்.

நீண்ட நாட்கள் மதுரையில் பணியாற்றியவரும், பழுத்த தொழிற்சங்கவாதியும், பல ஆண்டுகள் மாவட்ட செயலராக பணியாறறிய வருமான தோழர் அருண் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவருமான தோழர் S . அருணாசலம் அவர்கள் 27-11-2019 அன்று தன் மக்கள் வீட்டில் திருச்சியில் காலமாகிவிட்டார்.
அன்னாருக்கு AIBSNLPWA மதுரை மாவட்ட சங்கம் சிரந்தாழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது.
அன்னாரது பூதவுடல் நெல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டு , நம் மத்திய , மாநில சங்க தலைவர்களால் புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது. மதுரை மாவட்டத்தின் சார்பில் தோழர்கள் G.R. தர்மராஜன், S .வீராச்சாமி , கண்ணன் , மற்றும் மாரி AO  அவர்கள் சென்று மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினார்கள்.
தோழர் அருண் மறைந்து விட்டாலும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் என்றும் வாழ்வார்.