Friday 11 March 2022

பென்ஷன் மாற்றத்திற்கான நமது முயற்சிகள்.

 பென்ஷன் மாற்றத்திற்கு வழக்கு தொடுத்ததுடன் நில்லாத   நம்  முயற்சிகள் 

திருச்சியில் நமது சங்க கூட்டத்தில் நமது அழைப்பின் பேரில் கலந்து  கொண்ட ஹிந்து பத்திரிகையின் மூத்த நிருபர் திரு  C ஜெய்சங்கர் அவர்கள் நமது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து ஹிந்து பத்திரிகையில் நமது                கோரிக்கை  குறித்த செய்தி வெளியிட்டதுடன் தொலைத்தொடர்புத்துறை செயலர் திரு  K ராஜாராமன் அவர்களுடனும் நமது கோரிக்கையின் நியாயம் பற்றி பேசி நமக்கு உதவும்படி கோரியுள்ளார். அவருக்கு நமது நன்றிகள்.  

நமக்கு உதவும் படி வேண்டி பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகியுள்ளோம். 

1 . ஆந்திரா, காக்கிநாடா பாராளுமன்ற உறுப்பினர் 

திருமதி. வாங்க கீதா விஸ்வநாத் (Smt Vanga Geeta Viswanath) அவர்கள்

நமது நியாயமான கோரிக்கைகளை  பாராளுமன்றத்தில் பேசியதோடல்லாமல் நமது துறை மத்திய  அமைச்சர், தொலைத்தொடர்புத்துறை தலைவர், ஊய்வூதியார் நலத்துறை செயலர் ஆகியோரையும்  சந்தித்து விவாதித்து சாதகமான முடிவெடுக்கும்படி அழுத்தம் கொடுத்துள்ளார். அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.  





2 ஆந்திரா , அனந்தபூர்   பாராளுமன்ற உறுப்பினர் 

BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் 01-01-2017 லிருந்து,  ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி செய்ய வேண்டும் என்று ஆந்திர MP ( அனந்தபூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ) திரு தலரி ரங்கையா அவர்கள் நம் துறை அமைச்சர் மாண்புமிகு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு  கடிதம்எழுதியுள்ளார் .   இது விஷயமாக விரைவில் DOT செயலாளருக்கும், DOP & PW செயலருக்கும் கடிதம் எழுத இருக்கிறார் . அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள் .


மேலும் ஆந்திரா ,கர்னூல் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சஞ்சீவ் குமார்               (Dr. Sanjeev Kumar MP Karnool)அவர்களையும்



தமிழ்நாடு திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு K சுப்பராயன் அவர்களையும் சந்தித்து 
 ஏழாவது சம்பளக்கமிஷன்  பரிந்துரையின் அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட அமைச்சர் மற்றும் தொலை தொடர்பு துறை செயலரிடம் பேசவும் , கடிதங்கள் மூலம் அழுத்தம் தரவும் கோரியிருக்கிறோம்.







Thursday 10 March 2022

FIXED MEDICAL ALLOWANCE FOR IDA PENSIONERS





CcA office issued guidelines for submission of application from pensioners residing in Non CGHS AREA TOWARDS  sanction of Fixed Monthly Allowance of Rs 1000 which will be paid along with Pension .Contacted JointCca/Dy CCA telephonically ,clarrified some doubts.1.Applications can be sent directly to CCA OFFICE also.2.IDA pensioners whose address in the PPO is in CGHS COVERED AREA whereas they have been residing in CGHS non covered area can also apply if proper support of address proof like AADHAR.3.This FMA PAYMENT of Rs 1000 is in lieu of OPD Treatment .So,surrender of MRS CARD is a must.3.This facility will be extended to CGHS CARD HOLDERS residing in Non CGHS areas in place of OPD TREATMENT .It means CGHS CARD can be used only for inpatient treatment like  hospital admission.No medicines can be obtained from Wellness centre   as per para 2(i) of ANNEXURE A.   4.Para 2(ii) if Annexure A is,by surrendering MRS CARD,without applying for CGHS card pensioner can avail FMA .No inpatient treatment facility even in case of EMERGENCY.  5.Our suggestion,apply for CGHS CARD as BSNL IS REIMBURSING .

நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ படி (Fixed Medical Allowance )  மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதந்தோறும் ரூபாய் 1000 அவர்கள் CGHS   மருத்துவ மனை வரம்பிற்குள் வராத பகுதிகளில் வசித்தால் (ஒவ்வொரு மாதம் மும்) ஓய்வூதிய தோடு சேர்த்து வழங்க படுகிறது. BSNL ல் இருந்து IDA சம்பளத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று 21.10.2019 ல் தொலை தொடர்பு இலாக்கா (DOT) உத்தரவினை சுட்டி காட்டி, நமது மத்திய சங்க பொதுச் செயலாளர் 02.02.2021  அன்று திரு P. K. சின்ஹா, நிதித்துறை உறுப்பினர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.
உத்திரவு எண் 13-6/2020-21/BA&IT/54 to 86  04.03.2021 தேதியிட்ட உத்திரவை எல்லா தொலை தொடர்பு மாநில கணக்காயர்களுக்கும் ( Pr. CCA ) அனுப்பி ரூபாய் 1000 கொடுப்பதற்க்கான ஆயத்த பணிகளை தொடங்குமாறு அறிவுறுத்தியத்தின் அடிப்படையில்,   நமது   Jt. CCA திரு பாலசுப்பிரமணியம் அவர்களிடம் விவாதிக்க பட்டது. விரைவில் இந்த மருத்துவ படியை நமது  ஓய்வூதியர்களுக்கும்  கொடுப்பதற்கான வழி காட்டு முறையை (instructions) விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக தெரிவித்து உள்ளார்.




தோழர்களே, BSNL-ல் நிலவும் நிதி நெருக்கடியான சூழலில், மேற்கண்ட உத்திரவு வந்து இருப்பது தமிழகத்தில் உள்ள CGHS   மருத்துவ மனை வரம்பிற்குள் வராத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு  மாதா மாதம் FMA ஓய்வூதியதோடு சேர்த்து பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது. இது பற்றிய விவரங்களை CCA அலுவலகம் வெளியிட்ட பின் மேலும் இது குறித்து தெரிவிக்கப்படும். இந்த மருத்துவ Allowance பெறுவதற்கு BSNL  MRS  card ஐ surrender செய்ய வேண்டும். CGHS கார்டு பெற வேண்டிய தில்லை.
....Circle Secretary.

Fixed Medical Allowance பெறுதல் சம்பந்தமாக தோழர்கள் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர் . அவற்றிக்கு விடையளிக்கும் விதமாக இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன்.
CGHS Covered பகுதி என்பது CGHS ஆஸ்பத்திரியை  ( இதை WELLNESS Center ) என்கிறோம் சுற்றி 5 கிலோ மீட்டர்  சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியாகும்.





 

Wednesday 9 March 2022

நீங்கள் SAMPANN Pensioner எனில் உங்களுக்கானசெய்தி.....

 

07/03

Recently a new functionality for transfer of pension case from one CCA to another CCA has been developed in Sampann. Pensioner will have to raise a request for transfer of his pension from one CCA to another with his login credentials.

Once the transfer request is accepted, the pensioner will receive the message to his registered mobile number

For the final approval, The pensioner will have to sign the transfer request Form which will be sent to his address physically via post or he can also download from Sampann. He has to send the transfer request Form to the concerned address given in the downloaded Form duly signed along with copy of ID, e-PPO , signatures of two witnesses

Once the case is completely processed and transferred from the current CCA to new CCA, he will receive the message to his registered mobile number.

He can now download the Digitally signed transfer authority letter from Sampann.

Vedio Link

Monday 7 March 2022

CCA உடன் சந்திப்பு

 




அதிகப்படி வருடாந்திர ஊதிய உயர்வு வழக்கு -மாநிலச்செயலரின் மேல் நடவடிக்கை.

 


மேற்படிவழக்கின் தீர்ப்பு நகலை மாநிலச்செயலர் அவர்கள் தமிழ் மாநில CCA திரு சித்தரஞ்சன் பிரதான் அவர்களுக்கு அனுப்பி அதன்படி உரிய சாதகமான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார் .

Sunday 6 March 2022

PENSION REVISION CASE ADJOURNED

 

LATEST NEWS

06/03

Our Advocate has informed that PENSION REVISION CASE in PB CAT New Delhi , now stands adjourned to 11-04-2022.

P Gangadhara Rao GS

Saturday 5 March 2022

மகளிர் தின சிறப்புப் பதிவு






மகளிர் தினத்தை முன்னிட்டு நியூ இந்தியா சமாச்சார் பத்திரிகை. 

CLICK HERE TO READ

https://newindiasamachar.pib.gov.in/WriteReadData/flipbook/2022/mar/1st/tamil/index.html

இதில் "அவளே மாற்றத்தை உருவாக்குபவள்-புதிய இந்தியாவின் உந்து சக்தியாக மாறியுள்ள பெண்கள் "என்ற கட்டுரைக்காக மட்டுமே  இது பதிவிடப்படுகிறது. மற்ற பக்கங்களில் உள்ள செய்திகளை நீக்கி இதனை மட்டும் பதி விட முடிபியாத காரணத்தால் முழு பத்திரிகையும் இணைக்கப்பட்டுள்ளது   



Thursday 3 March 2022

அதிகப்படி வருடாந்திர ஊதிய உயர்வு வழக்கு(Extra increment case)

 அதிகப்படி வருடாந்திர ஊதிய உயர்வு வழக்கு(Extra increment case) ல்  தீர்ப்பு நகல்.





இந்த வழக்கு வெற்றி , தாக்கம் குறித்த விளக்கம்

ONE INCREMENT   


whatsapp மூலம் நமது extra  increment வழக்கு வெற்றி பற்றி குறிப்பிட்டிருந்தோம் .எல்லோருக்கும் மகிழ்ச்சி தான். சில தோழர்கள் அந்த மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்கள் .முத்தியாலு மாநில செயலராக இருந்த பொழுது இந்த வழக்கு மாநிலச்சங்கத்தின் சார்பாக தொடுக்கப்பட்டதால் எல்லோரையும் விட எனக்கு மகிழ்ச்சி அதிகமே .

சிலதோழர்கள் இதுபற்றி சில கேள்விகள் கேட்கிறார்கள்.சிலருக்கு இந்த பிரச்சனை தெரியவில்லை என்கிறார்கள்.எனவே அதைப்பற்றிய சிறிய விளக்கம் தரவே இந்தப்பதிவு.  

1979 ம் ஆண்டு NFPTE சம்மேளனத்தின் வெள்ளிவிழா பாட்னா நகரில் நடைபெற்றது .அப்போது சம்மேளனப் பொதுச்செயலராக இருந்த தோழர் குப்தா தபால் ,தந்தி தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்த பட்சம் இரண்டு பதவி உயர்வுகளாவது பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் .மாநாடு அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது ,அப்போதெல்லாம் ஒரு பதவி உயர்வும் ,ஊதியத்தில் தேக்கநிலையும் தன இருந்தது.எனவே எல்லோரும் வரவேற்றனர்.அப்போது அஞ்சல் ,தந்தி என்று இலாகா பிரியாமல் ஒன்றாக இருந்தது.

பல்வேறு இயக்கங்களுக்குப்பிறகு 16 ஆண்டில் முதல் பதவி உயர்வு என்றும் 2 வது பதவிஉயர்வுக்கு மாற்றாக மேலாளர்களுக்கு ரூ 35 ,சூபர்வைசர் அலவன்ஸ்  SI க்கு ரூ 25 என்று முதலில் ஏற்கப்பட்டது .இந்த பதவி  உயர்வு 30-11-1983 முதல் அமுலுக்கு வந்தது

16.10.1990 முதல் 26 ஆண்டுகள் முடிந்தால் அடுத்த பதவி உயர்வு 20.10.1990 முதல் அமுலுக்கு வந்தது 16 ஆண்டுகள் OTBP (கிரேடு  II ) 26 ஆண்டுகள் (கிரேடு III ) என்று சொல்லப்பட்டது GRADE III அதாவது BCR வாங்கியவர்களில் 10% ஊழியர்களுக்கு  GRADE IV வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.

GRADE IV பதவி உயர்வென்பது  பல தோழர்களுக்கு கிடைக்கவில்லை எனவே  GRADE IV  பதவிஉயர்வு கிடைத்தால் ஒரு ஆண்டு உயர்வு தொகை பலன் கிடைக்கும்.அதே பலனை BCR பதவி உயர்வு பெற்று GRADE IV  

பெற முடியாதவர்களுக்கும் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டிற்கு முன்பு தரவேண்டும் ..அதாவது ஒரு ஆண்டு உயர்வு தொகை தரவேண்டும் என்று BSNL அமைத்த பிறகு நடைபெற்ற 2 வது தேசியக்கவுன்சில் கூட்டத்தில் தோழர் குப்தா NFTE சங்கத்தின் கோரிக்கையாக எழுப்பினார்.இந்த தேசிய கவுன்சில் கூட்டம் 28.05.2003 ல் நடைபெற்றது.கோரிக்கை ஏற்கப்பட்டது .18.11.2003 அன்று EXTRA INCREMENT என்ற பெயரில் உத்தரவு வெளியிடப்பட்டது .BCR  ல் ஓராண்டு நிறைவு செய்திருக்கவேண்டும் என்பதும் இந்த EXTRA INCREMENT பென்ஷன் மற்ற பலன்களுக்கும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் BSNL உத்தரவு .BSNL போட்ட உத்தரவை DOT  ஏற்க மறுத்துவிட்டது.நமது தோழர்கள் ஓய்வு பெறும்போது BSNL லிருந்து CCA அலுவலகத்திற்கு பென்ஷன் நிர்ணயம் செய்து அனுப்பப்படும்.ஆனால் CCA அலுவலகத்தில் ஒரு ஆண்டு உயர்வுத்தொகை ( EXTRA INCREMENT ) வெட்டப்பட்டு LPD குறைத்து பென்ஷன் நிர்ணயம் செய்தது.வாங்கிய உத்தரவு பயனில்லாமல் போய்விட்டது .

இதை நமது தமிழ் மாநில சங்கம்தான் CCA விடம் எடுத்தது.தோழர்கள் D.கோபாலகிருஷ்ணன் ,ராமராவ் இருவரும் தான் முதலில் எழுப்பினார்கள்.ஒவ்வொரு  முறையும் FINANCE MEMBER சென்னை வரும்போது இது பற்றி விவாதித்தோம் .அப்போது PCCA வாக இருந்த உயர்திரு அழகர்சாமி அவர்கள் நமது கோரிக்கை நியாயம் என்று பரிந்துரைத்தார் .DOT நிர்வாகம் 27.07.2009 ல் ஒரு   EXTRA INCREMENT ஐ கணக்கிலெடுத்துக்கொண்டு பென்ஷன் நிர்ணயம் செய்ய உத்தரவிட்டது.

இந்த உத்தரவு வந்ததும் ஒரு EXTRA INCREMENT  கொடுக்கப்பட்டவர்களுடைய பென்ஷன் மாற்றியமைக்கப்பட்டது .தமிழ்நாட்டில்தான் முதலில் செய்யப்பட்டது .பிறகுதான் மற்ற நடைமுறைப்படுத்தப்பட்டது .

78.2% அகவிலைப்படி இணைப்பிற்காக நமது சங்கம் போராடி 2016 ம் ஆண்டு அதற்கான உத்தரவு பெறப்பட்டது 

78.2% அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்பட்டு 6000 பேருக்குமேல்  பெரும்பாலான ஓய்வூதியர்களுக்கு புதிய PPO அனுப்பப்பட்டு நிலுவைத்தொகையும் பெற்றுவிட்டனர் .ஏறத்தாழ 650 ஓய்வூதியர்களுக்கு 78.2% நிர்ணயம் செய்ய வேண்டிய தருணத்தில் DOT இடமிருந்து வந்த உத்தரவைக் குறிப்பிட்டு ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு EXTRA INCREMENT  ஐ வெட்டி விட்டு 78.2% நிர்ணயம் செய்ய உத்தரவிட்டு பைல்களை விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று CCA அலுவலகம் மாவட்டங்களுக்கு திருப்பியது.

ஓராண்டு அல்லது அதற்குமுன் ஓய்வு பெற்றவர்களிடமிருந்து அவர்களுக்குரிய தொகைக்கு அதிகமாக ,தவறாக கொடுக்கப்பட்டிருந்தால் பிடித்தம் செய்யக்கூடாது என்ற உசசநீதிமன்றத் தீர்ப்பையும் அதையே DOP&T OMNO.2/3/2016 RNO.18/3/2015 STT (PAY) ன்படியும் என்ற உத்தரவை சுட்டிக்காட்டி CCA   நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினோம்,பேசினோம் நிர்வாகம் ஏற்காததால் நீதிமன்றத்தில் 7.1.2017 அன்று வழக்கு தொடுத்தோம் .அந்த வழக்கின் முடிவின் அடிப்படையில் CCA வுக்குக் கடிதம் கொடுத்தோம் .அதன்பின் PCCA  9/10/2017 அன்று நிலுவையைப் பிடிக்கவில்லை,பென்ஷனை குறைக்கவில்லை என ( SPEAKING ORDER )  உறுதியளித்தார்.

3/12/2017 அன்று EXTRA INCREMENT வாங்கியவர்களுக்கு 78.2% அகவிலைப்படி இணைப்பு செய்ய வேண்டும் என்று  வலியுறுத்திய போது  PCCA திரு நிரஞ்சனா அவர்கள் 1/1/2017 முதல் EXTRA INCREMENT வெட்டிவிட்டு 78.2 சத அகவிலைப்படி இணைப்பிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார் .

PCCA அவர்கள் டெல்லிக்கு எழுதிய கடிதத்தில் 10/06/2013 முதல் அகவிலைப்படி இணைப்பு வழங்காமல் 

1/1/2017 முதல் கொடுப்பதாகவும் EXTRA INCREMENT இல்லாமல் கொடுப்பதாகவும் பின்னர் வருங்காலத்தில் பிடித்தம் செய்ய வேண்டி இருந்தால் 10/06/2013 முதல் வழங்கும் நிலுவையில் சமன் செய்யலாம் என்றும் அதனால் ஓய்வூதியர்களுக்கு பாதிப்பு ( HARDSHIP) இருக்காது என்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பென்ஷன் குறைப்பது தற்போது கொடுக்கக்கூடிய 78.2 % இணைப்பினால் சரியாகிவிடும் என்றும் வரிகட்டுபவர்களின் பணம் இதில் அடங்குகிறது என்பதால் ( TAX PAYING MONEY ) அதிகம் கொடுத்ததை சரிக்கட்ட உதவும் என்றும் DOT க்குக் கடிதம் எழுதியிருந்தார் .இதிலிருந்து PCCA நிர்வாகத்தின் நோக்கம் EXTRA INCREMENT ஐ வெட்டுவது என்பதும் பென்ஷனைக் குறைப்பது என்பதும் தெளிவாக தெரிந்தது.

எனவே நமது மாநில சங்கம் உடனடியாக ஆலோசனை செய்து மீண்டும் வழக்கு தொடுத்தது EXTRA INCREMENT ஐ வெட்டக்கூடாது .நிலுவை பிடித்தம் கூடாது 78.2 % அகவிலைப்படி இணைப்பு வழங்காதவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி 29/12/2017 அன்று வழக்குத் தொடுத்தோம் .

7/7/2018 அன்று முதல் அமர்வு நடைபெற்றது பல அமர்வுகள் தேதியிடப்பட்டு பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக 3/2/2022 அன்று விடுதி வாக்கு வாதம் (argument) நடைபெற்றது .

17/02/2022 அன்று  OA allowed என்று வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் முழுமையான தீர்ப்பு விவரம் கிடைக்கும்

CAT ( Central Administrative Tribunal ) அமைக்கப்பட்டதே கலவரையத்தை தவிர்பதற்குத்தான் அதிலும் இப்போது ஆண்டுக்கணக்கில் தாமதமாகிறது நமது வழக்கில் இரு நீதிபதிகள் இருக்கவேண்டும் இரண்டாவது நீதிபதி இல்லாததால் ஏறத்தாழ ஓராண்டும் கொரோனா தொற்று காரணமாக ஓராண்டும் மேலும் தாமதமாகி மொத்தம் 5 ஆண்டுகளாகிவிட்டன .

இந்த வழக்கில் தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்டவர் என்ற முறையில்தோழர் . முத்தியாலு ,CTO பகுதியை சார்ந்த தோழர் . R.டெல்லிராஜ்,சென்னை தொலைபேசி மாநிலத்தை சேர்ந்த தோழர்  அட்சயகுமார் அவர்களும் கையெழுத்திட்டோம் .

வழக்கறிஞ்ர்  திரு கார்த்திக் ராஜன்  அவர்கள் நமது வலக்கை வெற்றியாக்கியமைக்கு நமது ஓய்வூதியர் களின் நெஞ்சு நிறைந்த நன்றி .

இந்த வழக்கில் துவக்கம் முதல் வழக்கறிஞ்ரை நியமிப்பது,தொடர்ந்து அவர்களோடு தொடர்பு கொள்வது அமர்வு தேதிகளை தெரிவிப்பது அமர்வு நாட்களில் நீதிமன்றம் செல்வது.என்று அயராது பணி செய்த முன்னர் மாநில துணை தலைவரும்,இந்நாள் அகில இந்திய துணை தலைவருமான தோலார் சுகுமாரன் அவர்களுக்கும் 

இந்த வழக்கை முதலில் தமிழ் மாநில  நிர்வாகத்துடன் விவாதித்து வழக்கிற்கு ஆவணக்களை தயாரிப்பது தேவையான விளக்கங்களை வழக்கறினருக்கு வழங்குவது என எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்தது தோழர் D.கோபாலகிருஷ்னன் ,அகில இந்திய துணை தலைவர் ஆவார் .அவர்களுக்கு நமது நெஞ்சு நிறை நன்றி .

நமது பொது செயலாளராய் இருந்த தோழர் G .நடராஜன் ,நமது மாநில சங்க தலைவர் வழக்கு தொடுக்கும் போதும் தோழர் ராமராவ் தான் இன்றும் அவர்தான் வழக்கின் அமர்வின் போதும் பலவற்றிற்கு வந்திருந்து நேரில் பார்த்தவர்,நீதிபதியிடம் கூட பேசியவர் அவர்களும் நன்றி .வழக்கு அமர்வுகளில் போது நமது மாநில .

செயலர் தோழர் R.வெங்கடாசலம் ,தோழர்கள்.சுந்தரகிரிஷ்ணன்,கிருஷ்ணமூர்த்தி,சம்பத்குமார்,ரத்னா,அவர்களுக்கும் நன்றி.

இந்த வழக்கு தாமதமான காலத்தில் ஒரு உறுதிமொழி கொடுத்து சகோதர சங்கத்தை சேர்ந்த சிலர் வாங்கிவிட்டனர்.ஆனால் நமது சங்கத்தை சார்ந்த அனைவரும் பொறுமை காத்ததற்கு நன்றி.

அன்புள்ள தோழர்களே ,இந்த வழக்கு எதோ 700 பேருக்கு EXTRA INCREMRNT வாங்குவதற்கானது என்றும் யாரும் எண்ண வேண்டாம் .இந்த வழக்கை நாம் நடத்தி பெறாமலிருந்தால் EXTRA INCREMRNTவழங்கிய  6000 பேருக்கும் அவர்களுடைய EXTRA INCREMRNT வெட்டப்பட்டு பென்சன் குறைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொகை பிடித்தம் செய்யப்படும்  என்று  உணர்ந்தே வழக்கு தொடுத்தோம் .

போராடி பெற்ற உரிமையை ,கூட்டு ஆலோசனைக்குழு மூலம் பெற்ற ஒன்றை நிர்வாகம் எதேட்சையாக மாற்றுவதையும் ,மறுப்பதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும் .நம்முடைய உரிமைகளைப் பாதுகாப்பதில் நமது அமைப்பு என்றும் சளைக்காது போராடும்   ஓய்வூதியர்களின் ஒற்றுமையே நமது பலம்

தோழமையுடன் 

K.முத்தியாலு 

இணை பொதுச்செயலாளர் 

அகில இந்திய BSNL

ஓய்வூதியர் நல சங்கம் 

சென்னை

மன்னிக்க வேண்டுகிறேன்.

 தோழர்களே !

                                  Whatsapp மூலம் அனைத்து செய்திகளும் உடனுக்குடன்              பகிர ப்படுவதால் வலைத்தளத்தில் செய்திகளை பதிவிடுவதில் மிகவும் சுணக்கம் காட்டிவிட்டேன். தோழர்கள் மன்னிக்கவேண்டுகிறேன். Whatsapp மூலம் செய்திகளை அறியமுடியாதவர்களுக்கு வலைத்தளம் உதவிகரமாக இருக்கும் என்பதனி இப்போது உணர்கிறேன். வரும் காலங்களில் Whatsapp ல் செய்திகளை பகிர்ந்தாலும் வலைத்தளத்திலும் செய்திகளை பதிவிடமுயற்சிக்கிறேன். 

ராஜாராம் மு.