Friday 20 December 2019

அன்புத்தோழர்களே !
அனைவருக்கும் ஓய்வூதியர் தின நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளை 22-12-2019 ஞாயிறு  காலை 10.00 மணி அளவில் மதுரை -2 முதன்மை பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் மாபெரும் பிரமாண்ட ஓய்வூதியர்கள் தின விழா கொண்டாடப்பட உள்ளது.
அதுபோழ்து அகவை 70-ஐ க்கடந்த சுமார் 320 ஓய்வூதியர்கள் பொன்னாடை போர்த்தி , நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட உள்ளார்கள் . ஒரே விழா மேடையில் 320 பேர்கள் பாராட்டப்பட உள்ளது இந்தியாவிலேயே இதுவே முதன் முறையாக இருக்கும். இந்த சரித்திர புகழ் பெறும் விழாவில் பெருந்திரளாக நம் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். விழாவில் 
மதுரை மாவட்ட முதன்மை பொது மேலாளர் திருமதி. S. E. ராஜம் ITS  அவர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளார்கள் , மற்றும் BSNL  மதுரை மாவட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
  தமிழ் மாநில செயலாளர்                                                    தோழர். R.வெங்கடாச்சலம். 
அவர்கள் பேருரை ஆற்ற உள்ளார்கள் .மேலும் தமிழ் மாநில நிர்வாகிகளும் உரை ஆற்ற உள்ளார்கள்.
அனைவரையும் வருக! வருக!! என அன்புடன் அழைக்கிறோம்!!!
தோழமை வாழ்த்துக்களுடன் ,
S. வீராச்சாமி ,
AIBSNLPWA
மாவட்ட செயலர் 
மற்றும் 
மதுரை மாவட்ட சங்க நிர்வாகிகள் .







.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.