Monday 15 May 2017

14-5-2017 சிறப்பு பொதுக்குழு கூட்டம்












அகில இந்திய பி எஸ் என் எல் ஓய்வூதியர் நலச்சங்க மதுரை மாவட்டச்சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்' 14-5-2017 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. 3௦௦ தோழர்கள் கலந்துகொண்டனர். மத்திய சங்க துணைத்தலைவரும், உலக ஓய்வூதியர் சம்மேளன ஆசிய பகுதி செயலருமான தோ. D. கோபாலகிருஷ்ணன், மத்திய சங்க துணைப்பொது செயலரும் நெல்லை மாவட்ட செயலருமான தோ. S. அருணாசலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.


திருமதி வத்சலா அவர்களின் இறைவணக்கத்துடன் கூட்டம் தொடங்கியது. மறைந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட துணைச்செயலர் வீராச்சாமி வரவேற்புரை நிகழ்த்தினார். சென்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்ட அறிக்கைகள் செயலர் திரு தர்மராஜன் அவர்களால் படிக்கப்பட்டு ஏற்கப்பட்டது.
தோ. D G அவர்களுக்கு மாவட்ட சங்க சார்பில்  மாவட்ட செயலர் தர்மராஜன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
தோ. D G அவர்கள் தனது உரையில்
  •  78.2 % IDA  இணைப்பு என்பது நமது சங்கத்தின் சாதனை என்பதை        ஆணித்தரமான புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.
  • ஓய்வூதியர்களுக்கு மட்டும்  வழங்கப்பட்டுள்ள  இரவு நேர இலவச அழைப்பு, ரசீது இல்லாமல் பெறப்படும் மருத்துவப்படி இந்த உத்தரவுகள் பெறப்பட்டது நமது சங்கத்தின் முயற்சியே காரணம் என்றார்.
  • மேலும் நமக்கு முன்னால் உள்ள பென்ஷன் அனாமலி, நிரந்தரமான ஓய்வூதிய மாற்றதற்கான உத்தரவுகளை பெற நமது சங்கத்தின் செயல்படுகளை விளக்கினார்.
  •  சங்கத்தினை வலுப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருப்பதை சுட்டிக்காட்டி நன்கொடை வழங்கவேண்டிய காரணங்களையும் கட்டாயத்தினையும் இடித்துரைத்தார்.

தோ. G K  வெங்கடேசன்  அவர்களின் நன்றி அறிவிப்புடன் கூட்டம் இனிது நிறைவுற்றது.


   

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.