Monday 26 August 2019

அகில இந்திய சங்க அமைப்பு தினம்-10-ஆம் ஆண்டு

             இன்று 25-8-2019 ஞாயிறு  மதுரையில் நமது  அகில இந்திய சங்க அமைப்பு தினம்- 10ஆம் ஆண்டு நிறைவு விழா மாவட்டத்தலைவர்                 திரு. சத்தியசீலன் அவர்கள் தலைமையில் மதுரை BSNL  முதன்மைப்பொதுமேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது.
                50க்கும் மேற்பட்ட தோழியர் உள்ளிட்ட 400 ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். காரைக்குடி யிலிருந்து 20 தோழர்களும், விருதுநகரிலிருந்து
11 தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
    நமது சங்க உறுப்பினர் தோழர் கங்காதரன் அவர்களின் இறைவணக்கத்துடன் விழா தொடங்கியது. மாவட்டச்செயலரின் வரவேற்புரை, மற்றும் மாவட்டத்தலைவரின் முன்னுரைக்குப்பின், சிறப்பு அழைப்பாளர்கள் தோழர். D G., ராமராவ் , ஆகியோர் , 7வது  ஊதியக்குழு பரிந்துரைப்படி , நமது ஓய்வூதிய மாற்றம் பெற நமது சங்கத்தின் முயற்சி பற்றியும், நாம் DOT யம் ஏற்கும் விதத்தில் தயாரித்து அளித்துள்ள புதிய கருத்துரை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர் சிறப்பு அழைப்பாளர் நெல்லை அருணாச்சலம் அவர்கள் சங்கத்தின் அமைப்பு நிலை குறித்து சிறப்புரையாற்றினார்.
        தோழர் சூரியன் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிது நிறைவுற்றது.
         பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.

















                       
                      




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.