Tuesday 29 December 2020

கண்ணீர் அஞ்சலி.
நமது மாவட்டச் சங்க மூத்த தோழரும், மாவட்டப் பொருளாளர் பொறுப்பினை திறம்பட பல காலமாக தன் உடல் நலிவுகளையும்பொருட்படுத்தாது சிறப்பான பணி புரிந்து  அனைவரின் மனதிலும் நிறைந்தவருமான, மதுரை K புதூர்ஆத்திகுளம் பிரதான சாலை, 5 வது குறுக்குத்தெரு, கதவு ஏண் 5/173 ல் வசித்தவரும், மதுரை தந்தி அலுவலகத்தில் CTM ஆக பணிபுரிந்து பணிநிறைவில் ஓய்வு பெற்றவருமான திரு S ராஜாமணி அவர்கள் உடல் நலம் குன்றிய நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி இன்று(28-12-2020, திங்கட்கிழமை) பிற்பகல் 2:20 மணியளவில் இயற்கை எய்திவிட்டார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை 4:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
அவரது இழப்பு நமது மாவட்டச்சங்கத்திற்கு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குவோம். அவரைப்பிரிந்து
வாடும் ஆவரது குடும்பத்தார்களுக்கும்,
நமது சங்க உறுப்பினர்களுக்கும்  நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
தொடர்புக்கு
9486997010.
S .வீராச்சாமி
மாவட்ட செயலர்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.