Thursday 5 November 2015

மதுரையில் பி எஸ் என் எல் ஓய்வூதியர் ஆர்பாட்டம்

மதுரையில் பி எஸ் என் எல்  ஓய்வூதியர் ஆர்பாட்டம் 

இன்று 5-11-2015 வியாழன் காலை 11 மணிக்கு மதுரை பி எஸ் என் எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு 30 பெண்கள் உள்ளிட்ட 300 ஒய்வுதியர்கள் கலந்துகொண்ட எழுச்சிமிக்க ஆர்பாட்டம் நடைபெற்றது.

78.2 % அகவிலைப்படி இணைப்பு இன்னும் வழங்கப்படாமல் தாமதம் ஆவது குறித்தும் இது விஷயத்தில் பாரதப்பிரதமரின் தலையீட்டை வேண்டியும் அகில இந்திய பி எஸ் என் எல் மற்றும் DOT ஓய்வூதியர் நல மத்திய சங்கத்தின் அறைகூவலின்படி, மதுரை மாவட்ட அகில இந்திய பி எஸ் என் எல் மற்றும் DOT ஓய்வூதியர் நலச்சங்கத்தலைவர் திரு M .இரவீந்தரன் தலைமையில் இந்த ஆர்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.விண்ணதிர கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது  
செயலர் திரு தர்மராஜன் அவர்கள் 78.2% அகவிலைப்படி இணைப்பில் இன்றைய நிலை குறித்தும்,இப்போராட்டத்தின் அவசியம் குறித்தும் விளக்கமாக உரை நிகழ்த்தினார்.
திரு பழனிச்சாமி அவர்கள்  நன்றிகூற எழுச்சிமிகு போராட்டம் நிறைவுற்றது .




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.