Saturday 24 April 2021

 

தோழர்களே ,
நம் மதுரை மேலாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மன மகிழ் மன்றத்தில்  கொரோனா தடுப்பூசி போடும் ஓர் அரிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தினை நம் ஓய்வூதிய தோழர்களும் , அவர்களது குடும்பத்தினரும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் நேற்று வாட்சப் , வலைத்தளம் ஆகியவற்றில் செய்தி பதிவிடப்பட்டது மேலும் தொலைபேசி வாயிலாகவும் செய்தி அறிவிப்பு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று (24-04-2021) காலை 10-00 மணி முதற்கொண்டு நம் தோழர்கள் , அவர்களது குடும்பத்தார்கள் கூடினர். சுமார் 10-30 மணி அளவில் கோவி ஷீல்டு முதலாவது தவணை தடுப்பூசி போடப்பட்டது. மதுரை மாவட்ட நம் செயலாளர் தோழர் வீராச்சாமி மற்றும் சில முன்னணி தோழர்கள் வந்திருந்தோரை வரவேற்று, முக கவசம் சரியாக அணிந்துள்ளார்களா என பார்த்து , போதிய இடைவெளி விட்டு அமர செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ள உதவி செய்தார்கள். சுமார் மாலை 2-00 மணிவரை நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 110 பேர்கள் தடுப்பூசி போடப்பட்டார்கள். இலாகாவின் செலவில் பிஸ்கட்டும் , தேநீரும் அளிக்கப்பட்டது.  இன்றைய பயனாளிகளில் , சுமார் 95 விழுக்காடு,  நம் ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களது குடுப்பத்தினார்கள் மட்டுமே என்பது மன நிறைவு தரும் செய்தி
நிகழ்ச்சி ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்ததை கண்ட நம் தோழர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் இந்த முறையிலேயே போட விரும்பி வேண்டிக்கொண்டார்கள்.
நல்லதொரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த நி
ர்வாகத்திற்கும் , மாவட்ட சங்கத்திற்கும் பாராட்டுதல்கள்
தெரிவித்து சென்றார்கள்
தோழமையுடன்
S . வீராச்சாமி ,
மாவட்ட செயலர்
AIBSNLPWA ,
மதுரை மாவட்டம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.