Thursday 19 July 2018

SECOND STAGE DHARNA AT MADURAI ON 18-7-2018

நமது மத்திய சங்க அறைகூவலின்படி 
         7 வது சம்பளக்குழுவின் பரிந்துரைபடி IDA அடிப்படையில் 1-1-2017 முதல் ஓய்வூதிய மாற்றம் பெற இரண்டாம் கட்ட தர்ணா போராட்டம் 18-7-2018 அன்று மதுரை தல்லாகுளம் லெவல் 4 தொலைபேசி நிலைய வளாகத்தில் மாவட்ட த்தலைவர் திரு சத்தியசீலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ் மாநிலச்செயலர் திரு முத்தியாலு கலந்து கொண்டு சிறப்பித்தார்.
               தர்ணாவில் பல தோழியர் உட்பட 300 ஓய்வூதியர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நமது மாவட்டச்சங்கத்தின் துவக்க கால மற்றும் முன்னாள் செயலர் திரு GRD, மாவட்டச்செயலர் திரு வீராச்சாமி, 
மாவட்ட துணைச்செயலர் திரு சூரியன் ஆகியோர் அகில இந்திய சங்க தோற்றம், செயல் பாடுகள், மாவட்ட மாநில சங்க செயல் பாடு விவரித்தனர்.
                             மாநிலச் செயலர் திரு முத்தியாலு அவர்கள்
                                        "வாழ்நாள் பாட்டாளித்தோழன்"
                                    விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
          மாநிலச்செயலர் தனது சிறப்புரையில் நமது அகில இந்திய சங்கம் அமைந்திட வித்திட்டவர் நமது GRD என பொருமிதத்துடன் கூறினார். அவர் மேலும் தனது உரையில் இந்த போராடடதின் அவசியம், அகில இந்திய சங்கம் இது விஷயத்தில் எடுத்துள்ள முயற்சிகள்,அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் சங்கத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
         மாவட்டத்துணைச் செயலர் ராஜாராமின் நன்றி யுரையுடன் தர்ணா நிறைவுற்றது. பங்கு கொண்ட தோழர்கள் அனைவருக்கும் மதிய
உணவளிக்கப்பட்டது.



































No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.