Wednesday 15 January 2020

ழனியில் விருப்ப ஓய்வு திட்டம் 2019ல் செல்லும் தோழர்களுக்கு, அவர்களின் சேவைகளை பாராட்டி  நிர்வாகம் சார்பில் ஒரு வாழ்த்தி வழி அனுப்பும் விழா 13-01-2020 அன்று பழனியில் நடைபெற்றது. முதன்மை பொது மேலாளர் திருமதி S .E .ராஜம் அவர்கள் தலைமை ஏற்று சிறப்பாக நடத்தினார்கள் . நம் மதுரை மாவட்ட செயலர் தோழர் S .வீராச்சாமி அவர்களும் கலந்து கொண்டார். நம் செயலரையும் பேசுமாறு அழைத்தார்கள்.அவரும் நம் சங்க சாதனைகளை பட்டியலிட்டு அனைவரையும் நம் சங்கத்தில் சேருமாறு வேண்டுகோள் விடுத்தார்.அதன் பிரகாரம் 19 தோழர்கள் விருப்ப ஓய்வில் செல்ல இருக்கிறார்கள். அவர்களில் சுமார் 12 தோழர்கள் நம் சங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளார்கள். இன்னும் சில தோழர்கள் இணைவார்கள் என நம்புகிறோம். 
புதிதாக இணைய விருக்கும் தோழர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். அவர்கள் அனைவரும் நீண்ட ஆயுளும், நல்ல உடல் நலமும், மகிழ்ச்சியாக , நல்ல மன அமைதியுடன் வாழ வாழ்த்துகிறோம். வரும் 17-01-2020 வெள்ளிக்கிழமை தேனி பகுதியில் இது போன்ற ஒரு வாழ்த்தி வழியனுப்பும் விழா ஏற்பாடாகியிருக்கிறது. 
மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.