Sunday 26 January 2020

இன்று திண்டுக்கல் பகுதியில் விருப்ப ஒய்வு பெற்று செல்லும் தோழர்களுக்கு ஒரு சிறப்பான வாழ்த்தி வழியனுப்பும் விழா தொலைபேசி வளாகத்தில் நடைபெற்றது. மதுரை முதன்மை பொது மேலாளர் திருமதி .S .E .இராஜம் அவர்கள் தலைமை ஏற்று நடத்திக் கொடுத்தார்கள்.மதுரை மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலர் தோழர் S .வீராச்சாமி அவர்களும், மாநில உதவி செயலர் தோழர். S .சூரியன் , தோழர் முபாரக் , திண்டுக்கல் கிளை செயலர் தோழர் M .அழகர், கிளை பொருளாளர் தோழர் அந்தோணி ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
தமிழ் சினிமா புகழ் திருமதி பறவை முனியம்மா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.தோழர்கள் வீராச்சாமி மற்றும் சூரியன் அவர்களும் VRS ல் செல்லும் தோழர்களின் சேவைகளை பாராட்டி ,நம் ஓய்வூதியர் சங்கத்தில் இணைய வேண்டுகோள் விடுத்து பேசினார்கள். 61 தோழர்கள் VRS ல் செல்ல இருக்கிறார்கள். நம் வேண்டுகோளை ஏற்று 31 பேர் சங்கத்தில் இணைய விருப்ப மனு  கொடுத்துள்ளார்கள் . அவர்களையும் இன்னும் இணைய இருக்கும் தோழர்களையும் வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.