Monday 2 March 2020

BSNL லிருந்து VRS - 2019 ல் ஓய்வுபெற்றுள்ள அனைத்து இள ஓய்வூதியர்களை, குறிப்பாக மதுரை மாவட்ட பகுதியைச் சார்ந்த தோழர்களை உளமாற வாழ்த்துகிறோம். நீடித்த நல்வாழ்வு, நல்ல உடல் வளம் , வீடு , மனை , நிலம் , குழந்தைகள் , உற்றார் , பெற்றோர் மற்றும் நண்பர் குழாத்துடன் சீர்மிகு வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறோம். 
நம் சங்கத்தில் இணைந்துள்ள 203 தோழர்களை வருக வருக என வரவேற்கிறோம். வத்தலக்குண்டு பகுதியில் ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கை 30. அத்துனை  தோழர்களும் நம்முடன் இணைந்து விட்டது பெரும் சிறப்பு. சிட்டென பறந்து சிறப்பாக பணிமுடித்த வத்தலக்குண்டு பகுதி அத்துனை தோழர்களையும்  வெகுவாக பாராட்டுகிறோம். இதனையே முன்னுதாரணமாக எடுத்து மற்ற பகுதி தோழர்களும் முயன்று வெற்றி கனி ஈட்டிட  விழைகிறோம். 
நம்மிடம் இணைவோர் எண்ணிக்கை பெருகிட அனைவரும் உழைப்போம். இன்னும் பல சலுகைகள் ஓய்வூதியர் பெற்று மகிழ்ந்திட நம் எண்ணிக்கை பெருகிட வேண்டும். எண்ணிக்கையே பலம் , அந்த பலமே வெற்றிக்கு அடிபடை .
வாழ்க ஓய்வூதியர் ஒற்றுமை !  வளர்க்க AIBSNLPWA !!
                                 தோழமை வாழ்த்துக்களுடன் 
S .வீராச்சாமி ,
AIBSNLPWA 
மதுரை மாவட்ட செயலாளர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.