Friday 23 November 2018

22-11-2018 மதுரை உண்ணாநோன்பு போராட்டம்






























          22-11-2018 அன்று மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலைய மிதி வண்டி கொட்டிலில் மத்திய சங்க அறைகூவலின் படி உண்ணாநோன்பு போராட்டம் மாவட்ட தலைவர் திரு K சத்யசீலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது  . உண்ணாநோன்பில் பல தோழியர் உட்பட , மதுரை, திருமங்கலம், மேலூர் , திண்டுக்கல் வத்தலக்குண்டு, பழனி, தேனீ கம்பம்,  போன்ற இடங்களை சேர்ந்த   25௦ ஓய்வூதியர்கள் பங்குகொண்டனர். கூட்டத்தில் மாநிலச்சங்க உதவிச்செயலர்    திரு ஜெயச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தோழர் GRD நமது சங்கத்தின் தோற்றம் , போராட்ட வரலாறு ,சாதனைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். தோழர்கள் சுந்தரேசன் (மதுரை),                            M B கிருஷ்ணமூர்த்தி(மதுரை),  திண்டுக்கல்  அழகர்,  வத்தலக்குண்டு ராஜாராம், திருமங்கலம் சின்னச்சாமி ஆகியோர்  உரையாற்றினார்.
தோழர் G K வெங்கடேசன் அவர்கள் முன்னெடுப்பில் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி  விண்ணதிரும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நமது கோரிக்கையை நிறைவேற்றிவைக்க DOT செயலரை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் படிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது, அதன் நகல் நமது மதுரை PGM BSNL அவர்களிடம் கொடுக்கப்பட்டு DOT செயலருக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படும்.
           கஜா புயல் நிவாரண நிதி வேண்டி விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, தோழர்கள் உடனடியாக ரூ. 52௦௦/- நிவாரண நிதி வழங்கினர். 
            மாநில அமைப்புச்செயலர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் குளிர்பானம்  வழங்கி உண்ணா நோன்பினை முடித்து வைத்தார்,




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.