Monday 31 December 2018

வத்தலக்குண்டில் அகில இந்திய பி எஸ் என் எல் ஓய்வூதியர் நலச்சங்க கிளை துவக்கம்.

30-12-2018


            வத்தலக்குண்டில் 3௦-12-2௦18 ஞாயிறு
காலை 1௦ மணியளவில்
 அகில இந்திய பி எஸ் என் எல் ஓய்வூதியர் நலச்சங்க கிளை 
 துவக்கப்பட்டது. 

 மதுரை மாவட்டச்சங்கத்தின் அங்கமாக வத்தலக்குண்டில் புதிய கிளை துவக்க விழா 30/12/2018 ஞாயிறு அன்று காலை 1௦ மணிக்கு வத்தலக்குண்டு தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓய்வுபெற்ற துணைபொது மேலாளர் திரு M.சௌந்தரபாண்டியன் அவர்கள் தலைமையேற்றார்.
மதுரை மாவட்டச்சங்கத்தலைவர் திரு.சத்யசீலன்,செயலர்.    திரு வீராச்சாமி, துணைத்தலைவர் திரு சுந்தரேசன், தணிக்கையாளர் திரு நடராஜன் , மாநிலச்சங்க துணைச்செயலர் திரு சூரியன், துணைத்தலைவர் திரு GRD, அமைப்புச்செயலர் திரு பாலசுப்ரமணியன், கலந்துகொண்டு புதிய கிளையினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். 
மாநில , மாவட்ட  சங்க நிர்வாகிகள், கௌரவிக்கப்பட்டனர்.
மதுரை மாவட்ட துணைத்தலைவர் திரு சுந்தரேசன் அவர்கள் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றினார்.
கிளைக்கு கீழ்க்காணும் நிர்வாகக்குழு ஏகமனதாக    தேர்வுசெய்யப்பட்டது                                                  புதிய நிர்வாகிகள் மாவட்டச்சங்கத்தால் கௌரவிக்கப்பட்டனர். மாநில, மத்திய சங்கத்திலிருந்து வந்த வாழ்த்து செய்திகள் படிக்கப்பட்டன. ராஜாராம் நன்றிகூற , தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது. 
 அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.





No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.