Monday 7 March 2016

மார்ச் 8-ல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?

மகளிர் தினம் 8-3-2015


மார்ச் 8-ல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்?

மார்ச்8- தேதியை உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.வீட்டிற்குள்ளே இருந்த 
பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறதுஎன்றால்அதற்கு  வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர்தினமாகும்.  மார்ச்  8- சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்அது என்ன மகளிர்தினம்மார்ச் 8- தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப்பெண் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.

சர்வதேச மகளிர் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்தஉழைக்கும் பெண்  வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!

மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம்.ஆனால்எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்சற்றுவரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக்கிடைக்கும்.

1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம்சமத்துவம்பிரநிதிநித்துவம்(அரசனின் ஆலோசனை குழுக்களில்என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்ஆணுக்கு நிகராகபெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும்வேலைக்கேற்றஊதியம்எட்டு மணிநேர வேலைபெண்களுக்கு வாக்குரிமைபெண்கள்பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள்கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்குஅடுப்பூதும்பெண்கள்இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில்எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.
புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்ஆர்ப்பாட்டத்தில்ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்ஆயிரக்கணக்கான பெண்கள்கூட்டம்அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம்கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும்மழையில் ஊர்ந்து சென்றது!
அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்றுமிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக்கொன்றனர்.
இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான்கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன்.உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச்சமாதானப் படுத்தினான்இயலாது போகவும்அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்இந்தச்செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில்ஈடுபட்டனர்!
தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனிஆஸ்திரியா,டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர்போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையானவாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
பிரான்சில்புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க்,பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்குவாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான்அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்!அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

உலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாகக் கொண்டாடலாம்.ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும்அதன்வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்லஆணாதிக்க சமுதாயத்திலிருந்துபெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.

18-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள்மட்டுமே பணியாற்றினர்மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில்முடக்கி வைக்கப்பட்டிருந்தனர்பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூடமறுக்கப்பட்டதுமருத்துவமும்சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல்இருந்த காலம் அதுஇந்த நிலையில்தான் 1857-ம் ஆண்டின் நடந்த போரினால் ஏராளமானஆண்கள் கொல்லப்பட்டதும்படுகாயமடைந்து நடக்க முடியாத நிலைக்கு உள்ளானதும்நிகழ்ந்ததுஇதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள்நிறுவனங்களில்மகளிருக்கு பணி வாய்ப்பு ஏற்பட்டதுஇந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால்தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது.ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் வேலை செய்ய முடியும் என்று பெண் சமுதாயமேஅப்போதுதான் புரிந்து கொண்டது.

எது எப்படி இருந்தாலும்வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராகபணியாற்ற வாய்ப்பு கிடைத்ததேத் தவிரஊதியத்தில் பெண்களுக்கு அநீதிஇழைக்கப்பட்டது. (அது இன்று வரை பல இடங்களில் தொடருவது மற்றொரு பிரச்சினை).இதனால் பெண்கள் மனம் குமுறினர்ஆண்களுக்கு இணையான ஊதியம்உரிமைகள்கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை.

அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க்இங்கு நெசவுத் தொழிலில்பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர்இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்துமிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர்அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூடநிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலைஇருந்தது. 1857-ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர்.பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்தொடர்ந்து போராட்டங்கள்,பெண்கள் அமைப்புகள் தோன்றினஇதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண்தொழிலாளர்கள் 1857-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர்துணிகளைஉற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தான் இப்போராட்டத்திற்கு தலைமைஏற்றனர்இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உriமையாளர்கள் இப்போராட்டத்தை அரசின்ஆதரவுடன் அடக்கினர்வெற்றி பெற்றதாக பகல் கனவும் கண்டனர்ஆனால் அந்த பகல்கனவு நீண்ட நாட்களுக்கு பலிக்கவில்லைஅடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத்தனம் என்று பெண் தொழிலாளர்கள் 1907-ம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்துசம உriமைசம ஊதியம் கோரினர்.

 இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 ஆம்ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றதுஇதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தபெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்குகாட்டின.இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிதலைவர் கிளாரே செர்கினேஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரைஆற்றினர்அந்த தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர்தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்பெண்களை அடக்கி ஆளநினைத்த ஆண் சமுதாயம் இதற்கு ஒப்புக் கொள்ளுமா அல்லது இந்த தீர்மானம் நிறைவேறவழி ஏற்படுத்துமா... பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல்போனதுஇதற்கிடையே பெண் தொழிலாளர்கள் அமைப்பினர் ஆங்காங்கே உரிமைக் குரல்எழுப்பத் தொடங்கியிருந்தனர்.

1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்தபெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்துகொண்டார்.
அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும்என்று பிரகடனம் செய்தார்இதையடுத்து 94 ஆண்டுகளுக்கு முன்பு 1921-ம் ஆண்டில் உலகமகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர்அன்று முதல் இன்று வரை ஒவ்வொருஆண்டும் மார்ச் 8-ம் தேதியை நாம் மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.


REPOST OF LAST YEARS WOMENS' DAY

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.