Monday 4 August 2014

1-8-2014 ல் மத்திய சங்க செய்தி.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் உயர்வு.
1. திருமதி இந்திரா காந்தி அவர்களின் பதவிக்காலத்தில் 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த முன்னாள் பாராளு மன்ற                   உறுப்பினர் களுக்கு ஓய்வூதியம் ரூ. 3000 என நிர்ணயிக்கப்பட்டது.
2 .2009 ல் திரு. அட்டல் பிஹாரி வாஜ்பாயீ அவர்கள் அரசால் ,உறுப்பினர்பதவி வகித்த காலம் கணக்கில் கொள்ளப்படாமல், அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் களுக்கும் மாத ஓய்வூதியம் ரூ. 20,000 மாக
உயர்த்தப்பட்டது.
அது இப்பொது ரூ 35,000 (75% உயர்வு) ஆக மாற்றப்பட உள்ளது.
3. 5  ஆண்டுகளுக்கு அதிகமாக பதவிவகித்தவர்களுக்கு  ஒவ்வொரு முடிவுற்ற ஆண்டுக்கும் சேர்க்கப்படும் ஓய்வூதியம் இப்போது இருக்கும் ரூ 1500 லிருந்து  ரூ2000 ஆக உயர்த்தப்படவுள்ளது.  அதாவது 7 ஆண்டுகள் பதவி வகித்த ஒரு முன்னாள் பாராளு மன்ற உறுப்பினரின் ஓய்வூதியம் 35,000+4000=  ரூ39,000 ஆக இருக்கும்.

இப்போது பதவியிலிருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கு
  • மாதச்சம்பளம்  :ரூ50,000
  • மாத தொகுதிப்படி : ரூ 45,000
  • செயலக்ச் உதவி நிதி :ரூ30,000
  • மன்றத்தில் கலந்து கொள்ளும் நாள் தினப்படி ரூ 2000   ஆகியவை கிடைக்கும்.
       இந்த ஓய்வூதிய உயர்வுக்கு அமைச்சகங்களுக்கைடையிலான கலந்தாய்வுக்குப்பின் உரிய சட்டத்திருத்தங்கள் குளிர்காலக்கூட்டத்தொடரில்
பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும் எனபது அரசு வட்டாரச்செய்தி.


2-8-2014  வரவேற்கத்தக்க மாற்றம்.

வாக்குமூலங்கள்(AFFIDAVITS), அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு( ATTESTATION BY GAZETTED OFFICERS)க்குப் பதில் சுய சான்றளிப்பை சாமானிய மக்களின் நன்மைக்காக ஊக்குவிக்க பிரதமர் ஆர்வம்.
       இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தவறான சுய சான்றளிப்புக்கு இந்திய தண்டனைச்சட்டப்படி தண்டணை உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் மாநில மாநாடு.

http://bsnlpensioner.org.in/home/1236.JPG
   31-7-2014 ல் நடந்த மத்திய பிரதேசத்தின் மாநில மாநாட்டில்
ஜபல்பூரைச் சேர்ந்த திரு R.K. திவரி அவர்கள் மாநிலத்தலைவராகவும்,
போபாலைச் சேர்ந்த திரு M. C .  சர்மா மாநிலச்செயலராகவும் ,
போபாலைச் சேர்ந்த திரு  S.L. ஸ்ரீவஸ்தவா மாநிலப்பொருளாளராகவும்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நமது மாவட்டச்கங்கத்தின் வாழ்த்துக்கள்.

2-8-2014 அன்று நமது கர்நாடக மாநிலத்துணைச்செயலர்களும், நமது துணைப்பொதுச்செயளாலர் அவ்ர்களும் மாண்புமிகு இரயில்வேத்துறை அமைச்சரைச்சந்தித்து 78.2% பஞ்சப்படி இணைப்பு விஷயத்தில் அவரது உதவியை வேண்டினர். அமைச்சர் அவர்கள் நமது பிரச்சினையை பொருமையாகக் கேட்டு கண்டிப்பாக உதவுவதாக உறுதி அளித்துள்ளார்கள்.--
இது மத்திய சங்கத்தின் 3-8-2014 தேதியிட்ட செய்தி.


தமிழ் மாநில மாநாட்டுச் சுவரொட்டி.




 கீழே உள்ள திருநெல்வேலி மாவட்ட வலைதள செய்திக்கு நன்றி

Instructions relating to BSNL MRS

to view....letter..click here

Taxability of Medical Benefits :
TO VIEW LETTER...CLICK HERE

IT Rules on Taxation of Medical facilities
TO VIEW LETTER...CLICK HERE

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.